Sunday, April 22, 2007

உலகம் எங்கோ செல்லுகிறது

எங்கும் கொலை கொள்ளை கற்பழிப்பு..இவைகள் புதிய வார்த்தைகள் அல்ல. அனுதினம் நம் வழக்கு மொழி சொல்லகராதியில் தடுமாறாமல் உச்சரிக்கும் பழக்கமான‌ வார்த்தைகள் ஆகிவிட்டன. அதை நாம் கண்கூடாக காண்கிறோம். காலையில் எழும்பி சந்தோசமாக வெளியே போகிறோம். திரும்ப வீட்டுக்கு வந்தால் தான் நிம்மதி என்கிற நாட்கள். அமெரிக்காவில் சில வருடங்களாக நடக்கிற நாட்டு நடப்புக்களைப் பார்க்கும் போது 'சேப்டி' ‍ பாது காப்பு ' என்றால் என்ன விலை கேட்கும் அளவுக்கு நாட்கள் கொடியவைகளாகக் காணப்படுகின்றன. கல்லூரிக்குச் செல்லுகிறவர்கள் அநேகராக இருக்கலாம்; ஆனால் பள்ளி கல்லூரிக்குச் சென்று விட்டுவீடு திரும்பும் மாணவர்கள் சிலர்தான். போன வாரம் வெர்ஜினியா பல்கலைகழகத்தில் நடைபெற்ற நிகழ்வு அதை நமக்கு உதாரணம். நேற்று நாசாவில் நடைபெற்ற துப்பாக்கிச் சூடு வேலைக்குப் போய்விட்டு திரும்ப வருவார் என்று எதிர்ப்பார்த்திருக்கும் குடும்பத்திற்கு ஏமாற்றம் தரும் காரியம் இன்னுமொரு உதாரணம். இப்படிக் காலத்தைப் பார்க்கும் போது குருவி காக்காப் போல உயிர்களை சுட்டுத்தள்ளிக் கொண்டிருக்கிறார்கள், உயிரே...உனக்கு பாதுகாப்பில்லையா??

No comments: