Saturday, March 24, 2007

சனிக்கிழமை - ஒரு சிந்தனை

சனிக்கிழமை என்றாலே விடுமுறை என்றும் ஓய்வு என்றும் அமெரிக்காவில் அனைவரும் அறிந்ததே! ஆனால் அறிந்த உண்மையைப் பற்றிப் பேசவில்லை...அலைந்து.. பரந்து கிடக்கின்ற அமெரிக்காவின் உண்மையைப் பற்றிப் பேசுகிறேன்.

நாளும் நாடும் நம்மை சோம்பேறி ஆக்குவதில்லை. ஆனால் நாம் சோம்பேறி ஆக இருப்பது நமது சுயநலமே ஒழிய நாட்டின் நலம் கருதி அல்ல. அதனால் நாம் நலமிழந்து நலிவிழந்து காணப்படுகிறோம். அதற்கு நாம் என்ன செய்யலாம்?

நாட்டிற்கு வந்திருக்கும் நாம் இந்த நாட்டின் நல்ல கலாச்சாரங்களை கற்றுக் கொள்வதும் நாம் அதை நடைமுறைப் படுத்துவதும் தவறில்லை தானே! இந்த நாட்டுக்காரர்களைப் பாருங்கள். நேரத்தை பயன்படுத்துகிறார்கள்.

தன் கையே தனக்குதவி என்று கருமமே கண்ணாக‌ பெயின்ட் அடிப்பது, புல் வெட்டுவது, தோட்டத்தை பண்படுத்துவது போன்ற வீட்டு வேலைகள் செய்வதிலும் விளையாடுவதிலும், வேட்டையாடுவதிலும் மிகவும் சுறுசுறுப்பாக இயங்கி காலா காலத்தில் நேரத்தோடே படுக்கைக்குச் சென்று விடுகின்றனர். எனவே காலையில் நேரத்தோடே எழுந்திருக்கும் போது மிகவும் சுறுசுறுப்பாகக் காணப்படுகின்றனர். அது மட்டுமல்ல சோம்பலில்லாமல் இயங்குகின்றனர். நிறைய நேரமும் அவர்களுக்குக் கிடைக்கின்றது. இதை நாம் முயற்சி செய்யலாமே!

No comments: