Monday, March 26, 2007

கிரிக்கெட்

கத்துக்குட்டிகள் என்று மைக்கேல் ஹோல்டிங் சொன்னாலும் அவர் பேச்சை ஹோல்டிங் (பிடித்து) பண்ணிக் கொண்டு, அயர்லாந்தையும் பங்களாதேஷையும் கத்துக்குட்டிகள் என்று தவறாக எடை போட முடியாது. வேகமாக ஓடும் முயலுக்கும் மெதுவாக நகரும் ஆமைக்கும் இடையே நடந்த போட்டியை நாம் எல்லாரும் அறிந்திருக்கிறோம். எப்படியானாலும் வெற்றி வெற்றி தான்! தோல்வி தோல்வி தான்! ஆனைக்கும் அடிச் சறுக்கும் என்ற கூற்று உண்மையானாலும் ஆனைக்கு எப்போதுமே அடிச் சறுக்குமா? நடந்து முடிந்த 3 போட்டிகளில், சாத்தான் குளத்திலிருந்து வேதம் ஓதும் தம்பி ஆசீப் மீரான் சொன்னது போல செத்த பாம்பாகிய பெர்முடாவை மட்டுமே அடித்து சாதனை புரிந்த இந்தியர்க‌ளை எப்படி யானைக்கு ஒப்பிட முடியும்?

No comments: