Monday, March 26, 2007

கோபம்

உன் முகம் செவக்கிறதாலே கோபமா?
இல்லை நீ கோபங்கொண்டாதாலே முகஞ்சிவந்ததா?
கோபப்பட்டதால் என்னோடு பேசாமல் இருப்பது நியாயமா?
நான் கேலிக்காக‌ச் சொன்ன‌து உன‌க்கு கோப‌மா?

கோபம் வருவது இயற்கை தான்
கோபம் உணர்ச்சிகளில் ஒன்று தான்
இறைமகனும் கோபப்பட்டது உண்மைதான்.
கோப‌ப்ப‌ட்டாலும் பாவ‌ஞ்செய்யாதே என்ப‌து வேத‌ம்!
இருட்டுமுன் உன் கோப‌ம் த‌ணிய‌ட்டும் என்ப‌தும் வேத‌ம் தான்.
என‌வே கோப‌த்தைப் ப‌ற்றிக் க‌வ‌லைப்ப‌டாதே
கோப‌த்திலிருந்து நீ த‌ணிந்த‌தால்
கோப‌ம் உன்னில் கோபப்ப‌ட‌ட்டுமே!

No comments: